ஒரு ரயில் பெட்டியில் எதிரும் புதிருமா அவரவர் பிரச்சனையோட அவரவர் பிரயாணப்படுற மாதிரி..
“கால் பட்டிருச்சா.. ஸாரி“ங்குற போலி மரியாதையோட..
“என்ன ஸ்டேஷன் இது“ன்னு கேட்டா “தெரியலை“னு உதடு பிதுக்கி தோள் குலுக்குற அசட்டுக் கௌரசத்தோடு..
அடுத்த ஸ்டேஷன் வந்தா நாமே கவனிச்சுப் படிக்கணும். எதிர் சீட்டு ஆளைக் கேட்கக் கூடாதுங்குற கோவத்தோட..
எதிலே இருந்தாலும் இல்லாத மாதிரி நினைப்போட..
தான் உண்டு.. தன் வேலை உண்டுன்னு இருக்கணும்.
எதிர் சீட்டுக்கு இடைஞ்சல் பண்ணாம இருக்கணும். அவங்கவங்க ஸ்டேஷன் வரும், இறங்கி மறையுற நேரம் வரும். பேசாம இறங்கிப் போயிட வேண்டியதுதான். போகும்போது சொல்லிக்கணும்னு அவசியமில்ல.
அது மாதிரி தான் வாழ்க்கைலயும் சிலர்கிட்ட நடந்துக்கணும்...
படித்ததில் பிடித்தது....!!!
No comments:
Post a Comment