வாலாஜாபாத் அருகில் கோசாலை நடத்தி வரும் நிரஞ்சன், இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு நாட்டு மாடுகளை இலவசமாகக் கொடுத்து வருகிறார். அவரிடம் பேசிய போது, இயற்கை விவசாய இடுபொருட்களைத் தயாரிக்கவும், மற்றும் உழவுத் தேவைக்காகவும் நாட்டு மாடுகளை எங்கள் கோசாலையிலிருந்து இலவசமாகக் கொடுத்து வருகிறோம். இதுவரை 100 மாடுகளுக்கு மேல் கொடுத்திருக்கிறோம். இப்போது பசுமாடுகள் குறைவாகவே இருக்கின்றன. காளைமாடுகள்தான் அதிகம் இருக்கின்றன. இயற்கை விவசாயம் செய்ய நாட்டு மாடுகள் தேவைப்படுவோர் எங்கள் கோசாலையை அணுகலாம். இப்படி எங்களிடம் இருந்து மாடுகளை வாங்கிச் செல்பவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் மாடுகளை விற்கக்கூடாது. மாடுகளைப் பயன்படுத்தவில்லையென்றால், திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்” என்ற நிபந்தனையோடு அழைப்பு விடுக்கிறார்.
தொடர்புக்கு, நிரஞ்சன், செல்போன்: 94440-34723
---சாமுர---
27-03-2016
No comments:
Post a Comment